தன்னுடைய வாகனமான கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம் என்பது நமக்குத் தெரிந்தது தான். அப்படி அந்த கருட புராணத்தில் என்னென்ன சொல்லியிருக்கிறார் விஷ்ணு என்று தெரியுமா?
கருட புராணத்தில் மனிதன் இறந்த பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிரானது, எங்கு செல்கிறது, என்ன செய்கின்றது, சொர்க்கம் நரகம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்கள், நரகத்துக்கு யார் செல்வார்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.